Friday, July 4, 2025

ஞானசேகரினிடம் இருந்து 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். நேற்று 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக ஞானசேகரனை போலீசார் கைது செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஞானசேகரன் ஒப்புக்கொண்டுள்ளார். பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடிய நகைகளை விற்று அந்த பணத்தில் சொகுசுகார் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news