நாகை மீனவர்கள் 14 பேருக்கு டிசம்பர் 8ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 14 பேரை கடந்த 9ம் தேதி, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நாகை மீனவர்கள் 14 பேரின் காவலை டிசம்பர் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
