டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சராக இருந்தவர் ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா.
இவர் தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, அலுவலகத்திற்கு வந்த நபர், ஒர்லண்டோவை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
Advertisement
இதில் படுகாயம் அடைந்த அமைச்சர் ஒர்லண்டோ ஜோர்ஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், கொலையாளியை தேடி வருகின்றனர்.