காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சவுந்தரரஜன் இல்லத்திற்கு குமரி அனந்தன் உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.