Monday, August 4, 2025
HTML tutorial

இந்த பட்ஜெட் கானல் நீரைப் போன்றது : செல்வப்பெருந்தகை விமர்சனம்

2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஏழைகளை ஏமாற்றும் பட்ஜெட் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 15 சதவீதம் பேர், அதாவது 20 கோடிக்கு மேல் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக ஏமாற்றுகிறார்கள்.

இந்த பட்ஜெட் கானல் நீரைப் போன்றது. பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதி எதுவும் கொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News