கடந்த சில நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்திய விமானப் படையின் எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் துவம்சம் செய்து வருகின்றன.
இந்த ரேடாரின் மூலம் 1,000 கி.மீ. தொலைவு வரை இலக்குகளை கண்காணிக்க முடியும். குறைவான தொலைவு (40 கி.மீ.) , நடுத்தர தொலைவு (120 கி.மீ), நீண்ட தொலைவு (250 கி.மீ.) , மிக மீண்ட தொலைவு (400 கி.மீ.) என 4 வகையான ஏவுகணைகள் எஸ்400 கவசத்தில் பொருத்தப்பட்டு உள்ளன.
600 கி.மீ. தொலைவு வரைகூட இந்த ஏவுகணைகள் சீறிப் பாயும் திறன் கொண்டவை. ஒரே நேரத்தில் 160 வான் இலக்குகளை கண்காணிக்க முடியும். ஒரே நேரத்தில் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை அழிக்கும் சக்தி எஸ்400 க்கு உள்ளது.
இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசிய போது எஸ்400 பாதுகாப்பு கவசம் நடுவானிலேயே இடைமறித்து அழித்தன. எஸ்400 இது இந்தியாவின் அசைக்க முடியாத பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.