Friday, July 25, 2025

காலில் காயம் : மைதானத்திலிருந்து வெளியேறிய பண்ட், இந்திய அணிக்கு பாதிப்பு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் 37 ரன்கள் செய்து கொண்டிருந்தபோது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.

கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. அதன்பிறகு பண்ட் மருத்துவமனையிற்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

காயம் காரணமாக ரிஷப் பண்ட் இன்று விளையாடு வாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு என்று சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news