Wednesday, June 11, 2025

ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு..?

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இதையடுத்து அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமையாளர் டயாஜியோ பிஎல்சி, அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்கும் திட்டங்களை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணியின் தற்போதைய மதிப்பு 8,600 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது. விற்பனை மூலம் 2 பில்லியன் டாலர் (சுமார் 16,834 கோடி ரூபாய்) வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news