ராமேஸ்வரம் அருகே 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

321

ராமேஸ்வரம் அடுத்துள்ள எம்.ஆர்.டி. நகர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், சுமார் 600 கிலோ  கடல் அட்டைகளை பதப்படுத்தி சாக்கு மூட்டைகளில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், தோட்டத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனத்துறையினர் பறிமுதல் செய்த 600 கிலோ கடல் அட்டைகளை, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.