Tuesday, June 24, 2025

கோடநாடு வழக்கிலும் தண்டனை நிச்சயம் – மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டி, மீண்டும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கின் தீர்ப்பு குறித்து உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என வாக்குறுதி அளித்தோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news