Thursday, May 22, 2025

தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டைவிட்டு வெளியேற பாகிஸ்தானியர்கள் யாரேனும் மறுத்தால் போலீஸ் உதவியுடன் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குடியுமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news