இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபிக்குப் பிறகு மிகப்பெரிய போட்டியாக தூலீப் டிராபி பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
4 நாட்கள் கொண்ட இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்பின. ஆனால் பிசிசிஐ போட்டிகளை லைவ்-ஸ்ட்ரீம் செய்யவில்லை. மேலும் ஒளிப்பரப்பும் செய்யவில்லை.
பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ-யால், உள்நாட்டின் முக்கிய போட்டிகளை ஒளிபரப்ப முடியவில்லையா? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.