Friday, February 13, 2026

பெற்றோருக்காக 10 நிமிஷமாவது செலவு பண்ணுங்க..நயனின் நெகிழ வைத்த அட்வைஸ்

சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா, மாணவர்களை அட்வைஸ் மழையில் நனைத்துள்ளார்.

கல்லூரிக் காலம் மிகவும் மகிழ்ச்சியானது என கூறிய அவர், இந்த காலங்களில் யாரை சந்திக்கிறோம் என்பது முக்கியமானது என பேசியுள்ளார்.

மேலும், தற்போது எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் நிதானமும் பணிவும் அவசியம்.

குறிப்பாக, தினமும் பெற்றோர்களுடன் 10 நிமிடமாவது செலவழிக்க வேண்டும் எனவும், அதில் தான் அவர்களின் மகிழ்ச்சி உள்ளது என்றும் நெகிழ்ச்சியுடன் நயன் பேசியுள்ளார்.

Related News

Latest News