திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது : தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களிடம் தமிழ்நாட்டை அடகு வைக்க சந்தர்ப்பவாதிகள் முயற்சி செய்கிறார்கள்.
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு எவ்வளவு நிதி கொடுத்தாலும் அழுவதாக பிரதமர் மோடி கூறுகிறார். நான் அழுகிறவன் அல்ல. ஊர்ந்து போயி யார் காலிலும் விழுபவன் அல்ல. டெல்லியின் ஆதிக்கத்திற்கு தமிழகம் அடிபணியாது. என அவர் பேசியுள்ளார்.