உத்தரபிரதேச மாநில மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 21ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி சமைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்வபம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.