விமானத்தில் தனியாக பயணித்த 7 வயது மும்மை சிறுமி

489
Advertisement

பெற்றோர்களைப் பொறுத்தவரை, அவர்களின் குழந்தைகள் முதல் முறையாகச் செய்யும் அனைத்தும் சிறப்பான ஒன்று. குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைகளை சுதந்திரமாக உருவாக்குவது மற்றும் வாழ்க்கையில் புதிய விஷயங்களை அனுபவிக்க வைப்பதாகும்.

இந்நிலையில் , மும்மையை சேர்ந்த ஓர் தம்பதி செய்த காரியம் இணையத்தில் வைரலாகிவருகிறது. அனாயா என்ற இவர்களின் 7 வயது மகளை விமானத்தில் தனியாக பயணிக்க வைத்துள்ளனர்.

சிறுமி, இண்டிகோ விமானத்தில் குஜராத் மாநிலம் – வதோதராவில் இருந்து மும்பைக்கு தனியாக பயணித்துள்ளார். இதனை சிறுமியின் தாய் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CbaPYywgbTe/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

அதில் ,

“எனது முழு இதயமும், எனது 7 வயது மகள் விமானத்தில் தனியாக பயணம் செய்தால்.பயணத்திற்கு உதவிய இண்டிகோ விமான நிறுவனத்திற்கு நன்றி !

இண்டிகோ விமானத்தில் பயணிக்கும் துணையில்லாத மைனர் வாடிக்கையாளரைப் பொறுத்தமட்டில், பெற்றோர்/பாதுகாவலரால் படிவத்தை முதலில் நிரப்புவதே நடைமுறையாகும். மேலும், அவளை அழைத்து செல்லும் சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் இணைக்கப்பட வேண்டும், அந்த நபரைத் தவிர வேறு யாரும் குழந்தையை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விமான நிலையத்தில் தரை ஊழியர்களால் அழைத்துச்செல்லப்பட்ட என் மகள் , விமானத்தில் இருந்த விமானப் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டாள். தரையிறங்கியதும் விமானப் பணிப்பெண் அவளை விமான நிலையத்தின் தரைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

என் மகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன், ஒரு பெற்றோராக அவளை சுதந்திரமாக மாற்றுவதற்கு இதுபோன்ற முடிவுகளை எடுப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.அடுத்த முறை நான் ஒரு நீண்ட விமானத்தில் தனியாக செல்ல வேண்டும் என்று அவள் என்னிடம் சொன்னாள், என் இதயம் மிகவும் நிறைந்துள்ளது என்று அதனது பதிவில் பகிர்ந்துள்ளார் சிறுமியின் தாய்.