Tuesday, August 19, 2025
HTML tutorial

காஷ்மீர் தாக்குதலை கண்டித்து அங்கு கடையடைப்பு போராட்டம்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுமக்களும் வணிகர்களும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News