ஐசிசி மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய 3 வீரர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவின் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் வியான் முல்டர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி 754 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.