இந்திய கிரிக்கெட் அணி தற்போது இளைஞர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதற்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியை உதாரணமாகக் கூறலாம். ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் T20, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டனர்.
இதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி அவர்கள் ஆடமுடியும். தற்போது இந்திய ODI கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக சுப்மன் கில்லும், T20 கேப்டனாக சூரியகுமார் யாதவும் உள்ளனர்.
இந்தநிலையில் ரோஹித் சர்மாவை ODI கேப்டன் பதவியில் இருந்து BCCI நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அவருக்கு 38 வயதாகிறது. 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையின் போது அவருக்கு 40 வயதாகி விடும். அப்போதும் இதே Fitness உடன் அவரால் விளையாட முடியுமா? என்பது சந்தேகமே.
சொல்லப்போனால் உலகக்கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறி தான். IPL தொடரில் பஞ்சாப் அணியை ஷ்ரேயாஸும், குஜராத் அணியை கில்லும் சிறப்பாக வழிநடத்தினர். ஆனால் ரோஹித் சர்மா மும்பையின் ஓபனர் ரோலில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.
எனவே இந்திய அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து, இந்த முடிவை BCCI எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ரோஹித்தை தூக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அல்லது சுப்மன் கில், இருவரில் ஒருவரை ODI கேப்டனாக நியமிக்க BCCI முடிவு செய்துள்ளதாம்.