Wednesday, February 4, 2026

பெரம்பலூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில், உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், காலாவதியான உணவுப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலைப்
பொருட்கள் மற்றும் தேதி குறிப்பிடாத உணவுப்பொருட்கள் ஆகியவரை பறிமுதல் செயப்பட்டன.

இதில், 11 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் முறையாக அழித்தனர்.

Related News

Latest News