ICC தலைவராக இந்தியாவின் ஜெய்ஷா பதவி வகித்து வருகிறார். இதனால் BCCIக்கு சாதகமாக பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தியபோதும் இந்தியா துபாய் மைதானங்களில் விளையாடியது இப்படித்தான்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பயிற்சி செய்ய வேண்டிய ஆஸ்திரேலியா அணியை, லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து விரட்டிவிட்டு இந்திய அணி அங்கு பயிற்சி மேற்கொண்டதன் காரணமும் இதுதான். இப்படி இந்தியாவுக்கு சாதகமாக கிரிக்கெட் முடிவுகளை ஜெய்ஷா அமல்படுத்தி வருகிறார்.
நிலைமை இப்படியிருக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை, இந்தியாவில் நடத்த வேண்டும் என்கிற BCCI கோரிக்கையை ICC நிராகரித்து சர்ப்ரைஸ் அளித்துள்ளது. 2021, 2023, 2025 என கடந்த மூன்று முறையும் இங்கிலாந்து மைதானங்களில் தான் இறுதிப்போட்டி நடந்துள்ளது.
சுழற்சி முறையில் அனைத்து நாடுகளிலும், இந்த போட்டியை நடத்த வேண்டும் என BCCI நினைக்கிறது. ஆனால் காலநிலை, ரசிகர்கள் வருகை, மைதான வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு BCCI கோரிக்கையை ICC ரிஜெக்ட் செய்துள்ளது.
அத்துடன் 2027, 2029, 2031 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளையும், இங்கிலாந்து மைதானங்களிலேயே நடத்திட ICC முடிவு செய்துள்ளதாம். ICCயின் இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதல் காரணம் பாகிஸ்தான். சுழற்சி முறையில் நடத்தினால் பாகிஸ்தானிலும் இறுதிப்போட்டியை நடத்த வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியை அங்கு நடத்தி பெருத்த அடிவாங்கி விட்டதால், அதை தவிர்க்கவே இந்தியாவில் இப்போட்டியை நடத்த ஜெய்ஷா நோ சொல்லியிருக்க வேண்டும்.
இரண்டாவது காரணம் வருமானம். T20, ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய தொடர்களை நடத்தும்போது கிடைக்கும் வருமானத்தை ஒப்பிடும்போது இதற்கான வருமானம் குறைவு. ஆனால் ரிஸ்க் அதிகம். இதனால் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்? என்ற நோக்கிலும், ஜெய்ஷா BCCIயின் கோரிக்கையை மறுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
ICCயின் இந்த முடிவை பார்த்த ரசிகர்கள், ” இவரே பாம் வைப்பாராம். இவரே எடுப்பாராம், BCCIல இருந்து கோரிக்கை வச்சதும், ICCல இருந்து நிராகரிச்சதும் ஒரே ஆளா”, இவ்வாறு விதவிதமாக ஜெய்ஷாவை கிண்டலடித்து வருகின்றனர்.