Wednesday, June 4, 2025

”உன் முகத்தை பாக்கவே பிடிக்கல” ஆக்ரோஷமாக ‘கத்திய’ Shreyas

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற Qualifier 2 போட்டியில், சண்டியர் மும்பையை விளாசி பஞ்சாப் பைனலுக்கு சென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்களைக் குவித்தது.

பின்னர் Chasing செய்த பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும், கேப்டன் ஷ்ரேயாஸின் நிதானமான ஆட்டத்தால் 19 ஓவரிலேயே இலக்கை எட்டி, இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்துள்ளது. வெற்றி பெற்றாலும் ஷ்ரேயாஸின் முகத்தில் அதற்கான மகிழ்ச்சி தெரியவில்லை. ஒருவித இறுக்கத்துடனேயே இருந்தது.

இந்தநிலையில் போட்டிக்கு பின்னர் நடந்த ஒரு சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெற்றிக்கு பின் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் Shashank Singh, ஷ்ரேயாஸ்க்கு கைகொடுக்க முயன்றார். ஆனால் ஷ்ரேயாஸ் அவருடன் கைகுலுக்க மறுத்து விட்டார். அத்துடன், ” உன் முகத்தை தயவுசெய்து காட்டாதே” என்றும் கத்தினார்.

ஷ்ரேயாஸின் இந்த கோபத்திற்கு காரணம் Shashankன் அலட்சியம் தான். போட்டியின் 17வது ஓவரை Trend Boult வீசினார். 4வது பந்தை எதிர்கொண்ட Shashank சிங்கிள் தட்டிவிட்டு ரன் எடுக்க ஓடினார். ஆனால் வேகமாக ஓடாமல் Jogging செல்வது போல ஒருவித அலட்சியத்துடன் சென்றார்.

இதைப்பார்த்த மும்பை கேப்டன் Hardik Pandya, Direct Hit அடித்து அவரின் விக்கெட்டைக் காலி செய்தார். அப்போது 21 பந்தில் 35 ரன்கள் தேவை என்னும் நிலையில் பஞ்சாப் அணி இருந்தது. சற்று வேகமாக ஓடியிருந்தாலும் கூட, Shashank தனது விக்கெட்டைக் காப்பாற்றி இருக்கலாம். Knock Out போட்டி என்னும் பயமே இல்லாமல் Casual ஆக நடந்து சென்று, 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதுதான் ஷ்ரேயாஸின் கோபத்திற்குக் காரணமாகும். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ” கேப்டன் ஷ்ரேயாஸின் கோபம் நியாயமானது தான்” என்று, வரிந்துகட்டி அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news