Saturday, June 7, 2025

”இன்னும் இந்த செவரு எத்தனை பேர” Bumrahக்கு ஸ்கெட்ச் போடும் கம்பீர்?

ஒருபக்கம் T20, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் என 3 பார்மெட்களுக்கும், ஒரே கேப்டன் வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்று கவுதம் கம்பீர் தொடர்ச்சியாக பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். ஆனால் அவரது நடவடிக்கைகளோ அதற்கு நேர்மாறாக உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நல்ல பார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கொடுக்காமல், இளம்வீரர்கள் பலருக்கும் வாய்ப்பினை வாரிவழங்கி இருக்கின்றனர். குறிப்பாக 22 வயது இளம்வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளித்த BCCI, Uncapped பிளேயர்களை வைத்தே பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற, ஷ்ரேயாஸை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.

கவுதம் கம்பீரும், BCCIயும் செய்யும் டார்ச்சர் தாங்காமல் தான் ரோஹித், விராட் இருவரும் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தனர். அந்த வரிசையில் தற்போது பும்ராவும் இணையவுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்ததால், தன்னால் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளை ஆட முடியாது என்று பும்ரா BCCI மீட்டிங்கில் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் கடுப்பான கவுதம் கம்பீர், தற்போது பும்ராவை கட்டம் கட்டும் வேலைகளை கையிலெடுத்து உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து, கேப்டன் கில்லுடன் இணைந்து கம்பீர் அண்மையில் Press Meet அளித்தார். அதில் பும்ரா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ” பும்ரா இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை. அவருக்கு நிகரான மாற்று வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்,” என்று அலட்சியமாக பதில் அளித்தார்.

அவரின் இந்த பேச்சு தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஷமி அணியில் இடம்பெறாத நிலையில் பும்ரா இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை என்பது போல, கம்பீர் வார்த்தைகளை விட்டுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக ஓவர்கள் பந்துவீசி பும்ரா காயமடைந்தார். இதனால் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

எனவே இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன், பும்ரா ஓய்வு அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. தலைமை பயிற்சியாளராக இருக்கும் கம்பீர் முன்னதாக வீரர்கள் குடும்பத்தினருடன் தங்கக்கூடாது, சீனியர் வீரர்களுக்கு எந்தவொரு சலுகையும் கிடையாது என, பல்வேறு அதிரடி முடிவுகளை BCCI எடுக்க முக்கிய காரணமாக இருந்தார்.

அதாவது இந்திய அணியை சீராக்குகிறேன் என்ற பெயரில், சீனியர் வீரர்களை கம்பீர் டார்ச்சர் செய்துள்ளார். இதுதான் விராட்டின் ஓய்வு முடிவுக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது அவரது கவனம் பும்ரா பக்கம் திரும்பியுள்ளது. ஷ்ரேயாஸ்க்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருப்பதற்கும், கம்பீர் தான் காரணமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பார்த்த ரசிகர்கள், ” இன்னும் இந்த செவரு எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ” என்று, சமூக வலைதளங்களில் கவுதம் கம்பீரைக் கழுவி ஊற்றி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news