இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். தவறினால், போக்கு வரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.
இந்நிலையில் போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.