Tuesday, June 17, 2025

பலத்த காற்றுடன் மழை : கொடைக்கானலில் படகு சவாரி தற்காலிக நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்த நிலையில் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்ய முடியாமலும், ஏரியில் படகு சவாரி செய்ய முடியாமலும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news