Wednesday, July 16, 2025

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கம் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு 38 தொழிலாளர்கள், 2023-ஆம் ஆண்டு 14 தொழிலாளர்கள் இதுபோன்ற சுரங்க விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். சூடானில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இத்தகைய சுரங்க விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news