இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. முதன்முறையாக சுப்மன் கில் தலைமையில் இந்த டெஸ்ட் தொடரை, இந்தியா எதிர்கொள்கிறது. இதற்கான வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். என்றாலும் வீரர்கள் சில சமயங்களில் காயம் அடைவார்கள் என்பதால், அவர்களுக்கான மாற்று வீரரும் அணியில் இருக்க வேண்டும்.
ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்படும் அந்த வீரர், அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக விளையாடுவார். இதனால் ரிசர்வ் வீரர் தேர்வும் வெகுவாக கவனம் பெறும். ஆனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்த விஷயத்திலும் தன்னுடைய வேலையைக் காட்டி இருக்கிறார்.
சென்னை அணிக்காக ஆடிய அன்ஷூல் கம்போஜ், கலீல் அஹமது இருவருமே பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடிய போதும் அவர்களை ரிஜெக்ட் செய்துவிட்டு, கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணாவை அணியில் ரிசர்வ் வீரராக தேர்வு செய்துள்ளார். சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங், அன்ஷூலின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று, BCCIக்கு நேரடியாகவே கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கேற்ப பயிற்சி ஆட்டத்தில் அன்ஷூலின் பந்துவீச்சும் சிறப்பாகவே இருந்துள்ளது. இதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் 51 ரன்களை அடித்து அசத்தினார்.
ஆனாலும் கம்பீர் பயிற்சி ஆட்டத்தில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய ஹர்ஷித் ராணாவுக்கு, வாய்ப்பினை வாரிவழங்கி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” கம்பீர் எப்போ இந்திய டீமை விட்டு வெளியே போறாரோ அன்னைக்கு தான் இந்திய அணி உருப்படும்,” என்று சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர்.