Saturday, May 31, 2025

”தண்ணி கேன் போட வந்தவன்பா” கோலியால் கொந்தளிக்கும் ரசிகர்கள்..

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இடையிலான போட்டி கடைசியில் உப்பு சப்பில்லாமல் போய்விட்டது. ஆரம்பம் முதலே பெங்களூரு அணி போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால், ரசிகர்கள், ” நீ ரசத்தை ஊத்து ஆத்தா’ மோடுக்கு போய் விட்டனர்.

என்றாலும் களத்தில் தன்னுடைய ஆக்ரோஷ செயல்களுக்கு பெயர்போன கோலி, இந்த போட்டியிலும் Wanted ஆக வம்பிழுத்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகிறார். இந்திய வீரர் சர்பராஸ் கானின் சகோதரரும், 20 வயது இளம்வீரருமான முஷீர் கான் பெங்களூருக்கு எதிராக, Impact வீரராகக் களமிறங்கினார்.

முஷீர் கானைப் பார்த்த கோலி சக வீரர்களிடம், ” தண்ணி கேன் போட வந்தவன்பா’ என்னும் அர்த்தத்தில் “Water Boy’ என்று கைகொட்டி சிரித்து மகிழ்ந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” ஒரு நட்சத்திர வீரரா இருந்துக்கிட்டு நீங்களே இப்படி பண்ணலாமா?

மைதானத்துல இப்படி நடந்துக்குறத எப்போ தான் மாத்திக்க போறீங்க?” என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கிடையே போட்டிக்கு பிறகு விராட் கோலி தனக்கு Bat பரிசளித்ததாக, முஷீர் கான் பேசும் வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி பகிர்ந்து, மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இதைப்பார்த்த RCB ரசிகர்கள், ” எங்க அண்ணன் எப்பவுமே Youngstersக்கு சப்போர்ட் தான் பண்ணுவாரு. இதை பாத்தாச்சும் திருந்துங்க,” என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news