நடப்பு IPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. அதேநேரம் தொடர்ந்து கெத்து காட்டி வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, Eliminator போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது.
அபாரமாக Chasing செய்த குஜராத்தை பும்ரா தனது Yorkerகளால் சிதறடித்து, தொடரை விட்டே வெளியேற்றி விட்டார். இதற்கிடையே அண்மைய பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் Michael Clarke , ” நீங்கள் ஏன் விக்கெட் எடுத்த பிறகு அதைக் கொண்டாடுவதில்லை,” என்று பும்ராவிடம் கேட்டார்.
இதற்கு பும்ரா, ” வெற்றிபெற தான் விளையாடுகிறேன். ஆக்ரோஷமாக கொண்டாடுவதற்கு அல்ல. எதிரணியையும் மதிக்க வேண்டும். எல்லையைக் கடக்கவோ அல்லது கோமாளி போல நடந்து கொள்ளவோ விரும்பவில்லை,” என்று சிறப்பாக பதில் அளித்தார்.
இதைக்கேட்ட ரசிகர்கள், ” பும்ரா கிட்ட இருந்து விராட் கோலி கத்துக்கணும்”, என்று வன்மத்தைக் கக்கினர். இந்தநிலையில் குஜராத்திற்கு எதிரான போட்டியில், பும்ராவின் சாயம் வெளுத்துள்ளது. போட்டியின் 14வது ஓவரை பும்ரா வீசினார்.
3வது பந்தை எதிர்கொண்ட Washington Sundar, பும்ராவின் யார்க்கரில் விக்கெட்டைப் பறிகொடுத்து வீழ்ந்தார். அப்போது பும்ரா விக்கெட் கீப்பரிடம் சைகையில் பந்தினைக் கேட்பது போல, கைகளை முறுக்கி சுந்தரை வெறுப்பேற்றினார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ” சும்மா நல்லவன் மாதிரி நடிக்காதீங்க பும்ரா. எல்லாருக்கும் விக்கெட் எடுத்தா கொண்டாடத் தான் தோணும். ஆனா இப்படி அடுத்தவங்களை வெறுப்பேத்தி பார்க்கக் கூடாது,” என்று சமூக வலைதளங்களில், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.