Wednesday, February 18, 2026

வீட்டுல ‘pets’ வளக்குறீங்களா? உஷாராக இருங்கள்! உயிரிழக்கக்  கூட நேரிடலாம்!

“வீட்டுல கிளி, சிட்டுக்குருவி, கோழி மாதிரி பறவைகள் வச்சிருக்கீங்களா? கவனமா இருங்க! ஒரு வகை வைரஸ் – பறவைக் காய்ச்சல் வைரஸ் – உங்கள் செல்லப்பிராணிகளை மட்டும் இல்ல, உங்களையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு போய் சேர்க்கும்!”

இந்த வைரஸ் முதலில் பறவைகளைதான் தாக்கும். ஆனா பாதிக்கப்பட்ட பறவைகளோட கூழ், எச்சம், சவ்வுகள் – தான் வைரஸ் வேகமா பரவ  காரணமாக இருக்கிறது.

அதிலும், H5N1 வைரஸ் – இது பயங்கரமானது. இது ஒரு மனிதருக்குத் தொட்டா, 50% பேர் உயிரிழந்திருக்காங்க! இது உண்மை! இந்த வைரஸ், கோழி, வாத்து, காட்டுப் பறவைகள் மூலமா பரவுறது, ஆனா சில நேரத்தில் நம்ம வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் சென்று, அங்கிருந்து நமக்கும் பரவிடும் அபாயம் இருக்கு.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி மாதிரி சாதாரணமாகத் தோணும். ஆனா பிறகு நிமோனியா, மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு – டைரக்டா ICU-க்குப் போகும் சாத்தியக்கூறு இருக்கு.

இதுல பெரிய ஆபத்து யாருக்கு தெரியுமா? கோழி பண்ணையில வேலை செய்பவங்க, பறவைகளை வளர்க்கிறவங்க, குழந்தைகள், வயதானவங்க, காச நோய், ஆஸ்துமா உள்ளவங்க… இவங்க எல்லாம் ரிஸ்க்-ல இருகாங்க.

சரி, எப்படி தப்பிக்கலாம்?

✔பாதிக்கப்பட்ட பறவைய பாத்தாலே தொட்டுடாதீங்க.

✔ கோழி, முட்டை – நன்கு வெந்ததா சாப்பிடுங்க.

✔ பறவைகளைக் கையாளறதுக்கு முகமூடி, கையுறைகள் அணிங்க.

✔ காய்ச்சல் வந்தா உடனே டாக்டர் பாருங்க.

இந்த வைரஸ் இந்தியாவிலும் சில பேரை பாதிச்சிருக்குது. ஆனா நாம் ஒவ்வொருவரும் தன்னிச்சையா பாதுகாப்பு எடுத்துக்கிட்டா, நம்மையும் நம்ம ‘pets’-ஐயும் காப்பாத்த முடியும்.

“வீட்டுல செல்லப்பிராணிகள் இருக்கு என்று அலட்டாமல், சிறு விழிப்புணர்வோடு இருங்கள்  –  அது ஒரு பெரிய உயிரை காப்பாத்தலாம்!”

Related News

Latest News