Sunday, August 17, 2025
HTML tutorial

திமுக அரசு பதவி விலக வேண்டும் – வானதி சீனிவாசன் பேட்டி

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக, பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : “டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ரூ.1,000 கோடி ஊழல் செய்த தி.மு.க அரசுக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை. எனவே தி.மு.க அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News