பாகிஸ்தான் ராணுவ தாக்குதலை தொடர்ந்து சைபர் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வங்கிகளை குறி வைத்து சைபர் தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படும் நிலையில், வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சைபர் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வங்கிகள் விழிப்புடன் செயல்படவும், RBI-யுடன் தொடர்பில் இருக்குமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.