நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் எடிட்டிங் செய்யப்பட்டது என சினிமா இயக்குனர் திரு. சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார். இது தமிழக அரசியசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எடிட் செய்த படத்தை வைத்து ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை கோரி தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) மற்றும் மதுரை மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
வழக்கறிஞர் அஜித்குமார் என்பவர் கொடுத்துள்ள புகாரில் : கடந்த 15 ஆண்டுகளாக திரு. பிரபாகரன் அவர்களின் பெயரை கூறி கட்சி நடத்தி வரும் சீமான், பல இலட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் சென்றுகொண்டு இருக்கிறார்.
பிரபாகரன் அவர்களின் நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளார். ஆக பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடி கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த புகைப்பட மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை திரள் நிதி மூலம் திரட்டி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார். ஆகவே சமூகம் அவர்கள் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்று பிழைப்பு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சைமன் என்கின்ற சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.