கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ‘ரெட்ரோ’ திரைப்பட அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர் “காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின சமூகத்தினர்கள் மோதிக்கொண்ட சம்பவங்களை போன்றது.” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தெலுங்கானா பழங்குடியின அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த லால் சவுகான் என்பவர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்.ஆர். நகர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.