Sunday, June 1, 2025

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் : இதுவரை 34 பேர் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் காரணமாக இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் காய்ச்சலை பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவும் ஒரு தொற்று நோய் என்று WHO விவரிக்கிறது. பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், குமட்டல், வாந்தி, தலைவலி, பசியின்மை மற்றும் தசை வலி ஆகியவை அடங்கும்.

ஈஸ்டர் வார இறுதியில் பண்டிகைகள் மற்றும் பயணத் திட்டங்களுக்கு மத்தியில் தடுப்பூசி போடவும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் குடிமக்களை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news