சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு (45). இவரது ஹோட்டலுக்கு 3 பேர் குடிபோதையில் வந்துள்ளனர். உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு இளவரசுவை தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் வெட்டுக்காயம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் இளவரசுவை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் (23), அவரது நண்பர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (25) மற்றும் முத்து (30) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்துள்ளனர். அப்போது மூன்று பேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் சசிகுமார் என்பவர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திரம் பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.