முகக்கவசங்கள், பிபிஇ கிட்களை தீயிட்டு கொளுத்த முடிவு

350

பிரிட்டனில் கொரோனா அலை தாக்கியபோது கொள்முதல் செய்யப்பட்ட 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பள்ள முகக்கவசங்கள் மற்றும் பிபிஇ கிட் ஆகியவை வீணாக இருப்பதாகவும் அவற்றை எரித்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் பிரிட்டன் அரசு தெரிவித்தது.

ஆனால் இதுகுறித்து ஆய்வு செய்தக் குழு தரமற்ற கொரோனா கவசப் பொருட்களை அரசு வாங்கி மிகப்பெரிய தொகை வீணடிக்கப்பட்டதாகவும் இவற்றை எரித்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இதையடுத்து மிகக் குறைந்த அளவே எரிக்கப்படப் போவதாகவும் மீதமுள்ள முகக்கவசங்களை பிற நாடுகளுக்கு நனகொடையாக வழங்கவிருப்பதாகவும் பிரிட்டன் அரசு தெரிவித்திருக்கிறது.