தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றி வந்தார்.
அவரது உரையின்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும் என குறுக்கிட்டு பேசினார்.
இதையடுத்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது.
