Thursday, July 17, 2025

பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து- 7 பேர் பலி

பாகிஸ்தான், கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news