முதுகில் குத்தப்பட்டு விட்டேன் என்று, இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார். நடந்து முடிந்த IPL தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை ஷ்ரேயாஸ் அழைத்து சென்றார்.
வெற்றி பெற்றிருக்க வேண்டிய அந்த போட்டியில், 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி பஞ்சாப் அதிர்ச்சி அளித்தது. இதற்கு ஷ்ரேயாஸ் தன்னுடைய விக்கெட்டை, விரைவாக இழந்ததே முக்கியக் காரணமாகும். IPL தொடர் முடிந்த கையோடு மும்பையை மையமாக வைத்து, T20 தொடர் ஒன்று நடைபெற்றது.
இதில் மும்பை பால்கன்ஸ் அணியை கேப்டனாக ஷ்ரேயாஸ் வழிநடத்தினார். இறுதிப்போட்டி ஜூன் 12ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் மும்பை பால்கன்ஸ் – மும்பை சவுத் சென்ட்ரல் மராத்தா ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை பால்கன்ஸ் 157 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் Chasing செய்த மராத்தா ராயல்ஸ், 19.2 ஓவரில் இலக்கினை வெட்டி கோப்பையை வென்றது. போட்டியை நேரில் கண்டு ரசித்த முன்னணி வீரர் ரோஹித் சர்மா 2வது இடம் பிடித்த, ஷ்ரேயாஸின் அணிக்கு ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
போட்டிக்கு பின்னர் பேசிய ஷ்ரேயாஸ், ” தோல்விக்கு யாரையும் காரணம் சொல்ல விரும்பவில்லை. ஒரு போட்டியில் சிறப்பாக ஆடவில்லை. அதனால் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவினோம். இந்த தோல்வி வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நிச்சயம் மீண்டும் அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.
அவர்கள் தங்கள் முயற்சியை நினைத்து பெருமைப்பட வேண்டும். நான் முதுகில் குத்தப்பட்டு விட்டேன். இது எனக்கு பிடிக்கவில்லை,” இவ்வாறு வேதனையுடன் பேசியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ”ஷ்ரேயாஸ் யாரை இப்படி சொல்கிறார்?” என, சமூக வலைதளங்களில் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.