Tuesday, April 22, 2025

காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு

தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகையை ரூ.61.61 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news