Saturday, July 12, 2025

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது

நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  பிரசாந்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக உள்ள தகவலின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news