சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற வடமாநில நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்கள் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
