சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற வடமாநில நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது சேலத்திலும் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
