2010ல் ஆர்டர் செய்த நோக்கியா மொபைல் 16 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி

லிபியாவில் 2010 ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட நோக்கியா மொபைல் போன்கள் அடங்கிய ஒரு கப்பல், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இறுதியாக லிபியாவின் தலைநகர் திரிப்போலியில் உள்ள ஒரு கடையை வந்தடைந்துள்ளது.

2011 இல் வெடித்த உள்நாட்டுப் போர் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு சரிவு காரணமாக 2010 ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட நோக்கியா மொபைல் போன்கள் 16 ஆண்டுகளாக கிடங்குகளில் சிக்கித் தவித்தன.

இந்த மொபைல் போன்கள் கடைக்கு வந்தடைந்ததை கடைக்காரர் அதனை unboxing செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “இவை தொலைபேசிகளா அல்லது வரலாற்றுப் பொருட்களா?” என்று நக்கலாகக் கேட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related News

Latest News