Tuesday, February 17, 2026

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? – அரசு விளக்கம்

ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு 6 விலை அதிகரித்துள்ளது என்ற செய்தி சமூகவலைதளங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 இலட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள். 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

எனவே ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தெரிவிக்கப்படுகிறது.

Related News

Latest News