Friday, December 26, 2025

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தாக்குதல்., எச்.ராஜா கொடுத்த ரியாக்சன்

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான எச் ராஜா, இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் .

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது 4 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது ஒன்பது லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்து வரக்கூடிய ஆட்சியாளர்கள் இதனை எவ்வாறு அடைப்பார்கள் என செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி மந்திரி சபை அமைக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு கூட்டணி பற்றியோ, கூட்டணி மந்திரி சபை பற்றியோ நான் கருத்து கூற மாட்டேன் என தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட்டு ஆன்றோர் – சான்றோர்களிடம் இந்த துறை கொடுக்கப்படும் என்றார்.

நேற்று கிறிஸ்மஸ் விழா நடைபெற்ற பல இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எச். ராஜா சற்று கோபமாகி, வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என பேட்டியை நிறைவு செய்தார்.

Related News

Latest News