புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் எம்.ஜி.ஆருக்கு சமூக வலைதளங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான செங்கோட்டையன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
