தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிய அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு வழங்காமல், சாமுவேல் என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு புஸ்ஸி ஆனந்த் பொறுப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, நீலாங்கரையில் இருந்து பனையூர் அலுவலகத்திற்கு காரில் வந்த விஜயை தடுக்க முயன்றார். ஆனால் காரை நிறுத்தாமல் மெதுவாக மோதியபடி சென்றது.
இந்நிலையில், அஜிதா பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். பதவி வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
