நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். இவர் சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். “விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்று கூறினார்.
விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள். அவர்களை அவர் அடையாளம் காண வேண்டும். நல்லவர்களை விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று பிடி செல்வகுமார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.டி.செல்வகுமார் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக வந்துள்ளவர்களால் எங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஜயின் மக்கள் இயக்கத்திற்கு தூணாக இருந்தேன். விஜயின் ரசிகர் மன்றத்திற்கு தவெக-வில் முக்கியத்துவம் இல்லை. அதனால், முதலமைச்சர் தலைமையிலான திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றும் வகையில் கட்சியில் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
